புதுக்கோட்டையில் மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டி…
புதுக்கோட்டை மாவட்டம் தர்கா அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டி நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில் தர்கா அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் மாவட்ட அளவிலான சாலை ஓர மிதிவண்டி போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் மாவட்ட அளவில் 100க்கு மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்த மிதிவண்டி போட்டியை கணேஷ் நகர் காவல்ஆய்வாளர் வேலுச்சாமி துவக்கி வைத்தார்.
இதில் புதுக்கோட்டை மாவட்ட பள்ளி கல்வித்துறை அதிகாரிகள், மிதிவண்டி அசோசியேசன் நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்த சாலையோர மிதிவண்டி போட்டியில் முதலிடம் பிடிப்பவர்கள் பெரம்பலூரில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.