கோவையில் பிரதமர் மோடி..!! சென்னை உயர்நீதிமன்றம் வெளியிட்ட திடீர் உத்தரவு..?
தமிழ்நாட்டில் பாஜக பல்வேறு இடங்களில் பிரதமர் மோடியின் மக்கள் தரிசனம் என்ற பெயரில் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. இந்நிலையில், வருகின்ற 18ம் தேதி கோவையில் கவுண்டம்பாளையம் முதல் ஆர்.எஸ்.புரம் வரை பிரதமர் மோடி பங்கேற்கும் வகையில் பிரமாண்ட ரோடு ஷோ நடத்த பாஜகவினர் திட்டமிட்டிருந்தனர் அதற்ககாக மாநகர காவல் அலுவலகத்திற்கு பாஜக தரப்பில் அனுமதி கோரி கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.
ஆனால் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பிரதமர் மோடியின் சிறப்பு பாதுகாப்பு குழு அதிகாரிகளுடன் மாவட்ட ஆட்சியர் மற்றும் உயர் அதிகாரிகள் நடத்திய ஆலோசனையில் தற்போது தொடரும் குண்டுவெடிப்பு சம்பவங்களை கருத்தில் கொண்டு பாதுகாப்பு காரணங்களால் அனுமதி வழங்க முடியாது என மாநகர காவல் ஆணையர் பதில் கடிதம் அனுப்பியிருந்தார்.
இந்நிலையில் மார்ச் 18ம் தேதி பிரதமர் மோடி வருகைக்கு பாதுகாப்பு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.