பிரபல பின்னணி பாடகி பி. சுசீலா மருத்துவமனையில் அனுமதி..!!
இந்தியாவின் முன்னணி திரைப்படப் பின்னணிப் பாடகி. தென்னிந்தியாவின் “இசைக்குயில்” என்றும் “மெல்லிசை அரசி”என்றும் அழைக்கப்படும் பி.சுசீலா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உட்பட்ட மொழிகளில் நாற்பதாண்டுகளில் மட்டும் 25,000 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார்.. என்பது குறிப்பிடத்தக்கது..
பிரபல திரைப்பட பின்னணி பாடகி பி.சுசீலா உடல்நலக்குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்..
மேலும், அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.. சிகிச்சைக்கு பின் அவரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாடகி பி.சுசீலா சிகிச்சைக்கு பின் உடல் சீராக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.. மேலும் சிகிச்சையின் மூலம் வயிற்று வலியை குணப்படுத்தி விடுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.