மழையால் பாதிகப்பட்டுள்ள மக்கள்..!! தேமுதிக அலுவலகத்தை அணுகலாம்..! பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு..!!
சென்னையில் கனமழை பாதிப்பால் தங்களுடைய வாழ்வாதரத்தை இழந்து தவிக்கும் மக்கள்., உணவு., இருப்பிடம் என எந்த உதவி தேவைப்பட்டாலும் தேமுதிக அலுவலகத்தை பயன்படுத்திக்கொள்ளலாம் என பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
தற்போது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது… தற்போது வங்கக் கடலில் புதிய காற்றழுத்தம் உருவாகி இருப்பதால் மேற்கு, வடமேற்கு பகுதிகளில் கனமழை வலுவடைந்துள்ளது. எனவே தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா கடற்கரை பகுதிகளில் சூறைக்காற்று வீசக்கூடும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், தமிழ்நாட்டில் அடுத்து 3 நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புகள் இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடக்கிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் அக்டோபர் 14ம் தேதி முதல் அக்டோபர் 17ம் தேதி வரை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது..
தொடர்ந்து 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் சென்னையில் வெள்ள அபாயம் ஏற்படும் எனவும் சென்னையின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்க அதிக வாய்ப்புகள் இருப்தாகவும் சென்னை மாநில ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக சென்னைக்கு அடுத்த இரண்டு நாட்களுக்கு ஆரஞ்சு அலார்ட் விடப்பட்டுள்ளது..
கடந்த ஆண்டு சென்னையின் பல்வேறு பகுதிகளில் மக்கள் தங்கள் வாழ்வாதரத்தை இழந்தனர்.., உண்ண உணவு, உடை மற்றும் இதர அடிப்படை வசதிகள் இல்லாமல் மிகவும் பாதிகப்பட்டனர்.. அதற்காக இந்த ஆண்டு தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்..
இந்நிலையில் கனமழையால் வீடுகளில் மழை நீர் சூழ்ந்து அங்கு வசிக்க முடியாத மக்கள், மற்றும் தெரு ஓரங்களில் வசிக்கும் மக்கள் என உணவு., உடை, அடைக்கலம் என உதவி தேவைப்படுபவர்கள் தேமுதிக அலுவலகத்தில் தங்கிக்கொள்ளலாம்.. இங்கு பொதுமக்களுக்காக 3 வேலையும் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.. என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார்.