பானிபூரி கடையில் கஞ்சா விற்பனை..!! மாணவர்களை போதை பொருளுக்கு அடிமையாக்கும் குடியாத்தம் இளைஞர்..!!
குடியாத்தம் தனியார் பள்ளி அருகே பானி பூரி கடையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் கைது அவரிடம் இருந்த கஞ்சா பாக்கெட் பறிமுதல் செய்து போலீசார் விசாரணை
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகிலுள்ள பிச்சனூர் பேட்டையில், பலமனேரி சாலையில் தனியார் பள்ளி ஒன்று உள்ளது. அப்பள்ளி அருகே பானிபூரி கடை இயங்கி வருகிறது. அந்த பானிபூரி கடையில் பெரும்பாலும் பள்ளி மாணவர்கள் சென்று பானிபூரி சாப்பிடுவதை வழக்கமாக வைத்து வந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் மட்டுமின்றி கல்லூரி மாணவர்கள் சென்று சாப்பிட்டு வந்துள்ளனர். அதுவே பொது மக்கள் சென்றால் ஒரு சிலருக்கு பானிபூரி இல்லை என்று சொல்லி விடுவதால்.., ஒரு சிலருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
இதுகுறித்து மாணவர்களை பின் தொடர்ந்ததில் அங்கு கஞ்சா விற்பனை செய்வது தெரியவந்துள்ளது.., அதிருந்து போன பொது மக்கள்.., இது குறித்து குடியாத்தம் போலீசருக்கு ரகசிய தகவல் கொடுத்துள்ளனர்.
தகவலின் பெயரில் பானிபூரி கடைக்கு சென்ற குடியாத்தம் போலீசார். பானிபூரி கடையை சோதனை செய்து, பாக்கெட் பாக்கெட்டாக கஞ்சாவை எடுத்துள்ளனர். இந்த கஞ்சா விற்பனை குறித்து விசாரணை செய்ததில் பானிபூரி கடையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பள்ளி கொண்ட பகுதியை சேர்ந்த அஜித்குமார் (வயது24) என்பவரை கைது செய்துள்ளனர்.
மேலும் அஜித்குமாரிடம் இருந்த 15 கஞ்சா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் அஜித் குமார் மீது வழக்கு பதிவு செய்து, காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனை தொடர்ந்து தனியார் பள்ளி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட, பானி பூரி கடை உரிமையாளரையும் கைது செய்துள்ளனர். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு போதை பொருள் விற்ற சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.