பாலை வன பேரீட்சை பழம் இனி..! ஒரு கிலோ பேரீட்சை விலை..!
அரியகுளம் பகுதியில் பாலை வனத்தில் விளையும் பேர்ட்சை விவசாயி அறுவடை பணி துவக்கம் தர்மபுரி அருகே 34 வகையான பேரீட்சை மரம் 11 ஏக்கரில் விவசாயி ஒருவர் சாகுபடி செய்துள்ளார். பேரீச்சை பழம் அறுவடை தொடங்கியது.
ஒருகிலோ ரூ.150 முதல் ரூ.600 வரை ரகத்துக்கு ஏற்ப விற்பனை செய்யப்படுகிறது. தர்மபுரி வட்டம் அரியகுளம் அருகே அரேபிய பேரீச்சை அமோக விளைச்சலை கண்டுள்ளது. வறட்சியால் விவசாயத்தை இழந்து தவிக்கும் விவசாயிகளுக்கு இது வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே பருவ மழை போதிய அளவில் பெய்யவில்லை . இதனால் விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் தவிப்பிற்கு ஆளாகினர். இந்நிலையில் அரியகுளத்தைச் சேர்ந்த நிஜாமுதீன் (67) என்ற விவசாயி கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அரேபிய நாட்டில் இருந்து, பேரீட்சை நாற்றுகளை வாங்கி வந்து, இங்கு சாகுபடி செய்தார். தற்போது பேரீச்சை மரங்களில், பழங்கள் குலை , குலையா தொங்குகின்றன.
இதன் அறுவடை இன்று தொடங்கியது. உள்ளூர் சிறு வியாபாரிகள், சில்லறை விற்பனைக்கு அவற்றை வாங்கி சென்றனர். இதுகுறித்து நிஜாமுதீன் கூறுகையில், அரேபிய நாட்டில் வேலை செய்தேன். அப்போது விவசாயத்தின் மீது ஆர்வம் ஏற்பட்டது. இதனால் பேரீச்சை நர்சரி பண்ணைக்கு சென்று வந்தேன்.
அங்கு சாகுபடி, வளர்க்கும் முறைகள் குறித்து பயிற்சி எடுத்துக் கொண்டேன் அங்கிருந்து 250 பேரீச்சை கன்றுகள் வாங்கி வந்து நட்டேன் தர்மபுரியின் தட்ப வெட்ப நிலை பேரீச்சை கன்று வளர்ப்பதற்கு ஏற்றதாக அமைந்தது பின்னர் இதனை , 11 ஏக்கரில் பேரீட்சை பண்ணையாக மாற்றினேன்.
கோவை , திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தேனி , மதுரை , திண்டுக்கல் உள்ளி ட்ட பல்வேறு இடங்களிலிருந்து விவசாயிகள், வேளாண்மையியல் மாணவர்கள் வந்து பார்த்து வளர்ப்பு, பராமரிப்பு குறித்து கேட்டு தெரிந்து செல்கின்றனர். மேலும் ராஜஸ்தான், குஜராத், மத்தியபிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலத்தில் இருந்தும் பேரீச்சை கன்றுகள் வாங்கி செல்கின்றனர்.
தற்போது வெளிநாட்டிற்கு நாற்றுகள் ஏற்றுமதியாகிறது. 34 வகையான பேரீச்சை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இன்று முதல் அறுவடை தொடங்கி உள்ளது. ஆகஸ்ட் மாதம் வரை இந்த சீசன் இருக்கும் ஒரு கிலோ பேரீட்சை ரூ.150 முதல் ரூ.600 வரைக்கும் தோட்டத்தில் விற்பனை செய்யப்படுகிறது என்றார்.
பாலை வனங்களில் மட்டுமே விளையும், பணம் கொழிக்கும் பயிரான பேரீச்சை , தர்மபுரி மாவட்ட விவசாயிகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. வறட்சியால் விவசாயத்தை இழந்து தவிக்கும் விவசாயிகளுக்குபேரீச்சை ஒரு வரப்பிரசாதமாகவும் அமைந்துள்ளது.
– லோகேஸ்வரி.வெ