எம்.ஆர்.வீரப்பன் காலமானார்..!! மூத்த அரசியல் தலைவர் என அழைக்கப்பட்டது ஏன்..?
புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்த ஆர்.எம்.வீரப்பன், தந்தை பெரியார் மற்றும் பேரறிஞர் அண்ணாவிடம் உதவியாளராக பணிபுரிந்தவர். 1950ம் ஆண்டில் மறைந்த தலைவர் எம்ஜிஆர் அவர்கள் சினிமாவில் நடித்த காலத்தில் இருந்தே அவருடன் பணியாற்றியவர். 1963-ம் ஆண்டு எம்ஜிஆர் தாயார் சத்யா பெயரில் சத்யா மூவீஸ் எனும் திரைப்பட நிறுவனத்தை தொடங்கினார்.
அனைத்து தலைவர்களும் :
அதன் பின் எம்ஜிஆர், அண்ணா கட்சியை தொடங்கிய போது அவரது வலதுகரமாக அக்கட்சியில் இருந்தவர் பாடுபட்டவர். எம்ஜிஆர் முதல்வராக இருந்த காலத்திலேயே அமைச்சரவையில் சக்திவாய்ந்தவராக இருந்தவர்.
பின்னர் எம்ஜிஆர் மறைவுக்குப் பின் ஜெயலலிதா தலைமையிலான ஒருங்கிணைந்த அண்ணா திமுகவிலும் பணியாற்றினார். அதன்பின் ஜெயலலிதாவின் ஆதரவில் அமைச்சரவையிலும் இடம் பெற்றிருந்தார்
பின்னர் ஜெயலலிதாவால் அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட போது எம்ஜிஆர் கழகத்தைத் தொடங்கினார்.
மறைந்த முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதியுடன் அவர் மறையும் வரை மிக நெருக்கமான நட்பில் இருந்த ஆர்.எம்.வீரப்பன் தொடர்ந்து திமுகவிற்கு ஆதரவு கொடுத்துவந்தார். தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினுடனும் நெருங்கிய நட்பில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தயாரிப்பாளர் ஆர்.எம்.வீரப்பன் :
அரசியலில் மட்டுமின்றி சினிமாவிலும் இவரது வெற்றி இன்று வரை எவராலும் மறக்க முடியாதது.., நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பாட்ஷா திரைப்படம் ஆர்.எம்.வீரப்பனின் சத்யா மூவீஸ் தயாரிப்பு என்று சொல்லலாம்.
இந்நிலையில் பல ஆண்டுகாலமாக அரசியலிலும்.., சினிமாவிலும் அயராது உழைத்த ஆர்.எம்.வீரப்பன் வயது மூப்பு காரணமாக இன்று காலமானார் இவரின் மறைவிற்கு, அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.