பெரம்பலூர் அருகே, விஷம் கொடுத்து 2 குழந்தைகளை கொன்று விட்டு தாயும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் அருகே பெண்ணகோணம் கிராமத்தை சேர்ந்த விஜய் என்பவர் துபாயில் வேலை செய்து வரும் நிலையில், அவரது மனைவி ஜெயா என்பவர் இரட்டை பெண் குழந்தைகளுடன் கடலூர் அடுத்த ராமநத்தம் கிராமத்தில் அவரது தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், ஒரு வாரத்திற்கு முன்பு பெண்ணகோணத்தில் உள்ள மாமியார் வீட்டிற்கு வந்த நிலையில் ஜெயா 2 குழந்தைகளை கொன்று விட்டு அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் மூன்றுபேரின் உடல்களை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதணைக்காக அனுப்பி வைத்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெண்ணகோணம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.