மார்ச் 31 டெல்லியில்…? இந்திய கூட்டணி வெளியிட்ட அறிக்கை..?
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை கண்டித்து இந்தியா கூட்டணி சார்பில் மார்ச் 31ஆம் தேதி டெல்லியில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் மார்ச் 21ஆம் தேதி இரவு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை, அமலாக்கத் துறை அதிகாரிகள் தலைமையகத்துக்கு அழைத்துச் சென்று அவரிடம் விசாரணை நடத்தினர்.
இதையடுத்து ரௌஸ் அவென்யூ நீதிமன்ற வளாகத்தில் பணப்பரிவர்த்தனை மோசடி வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தின் சிறப்பு நீதிபதி முன்பு அவரை ஆஜர்படுத்தி விசாரணை மேற்கொண்ட போது
அவரை 6 நாள்கள் விசாரணைக் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அமலாக்கதுறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். அதற்கிடையில் கெஜ்ரிவாலின் கைதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை கண்டித்து இந்தியா கூட்டணி சார்பில் மார்ச் 31ஆம் தேதி டெல்லி ராம்லீலா மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிக்கை வெளியாகியுள்ளது.