சூரியின் அடுத்த படத்தை இயக்கபோவது இவரா… நடிகர் சூரி பதிவு..!
வெண்ணிலா கபடிகுழு திரைப்படத்தின் மூலம் அறிமுகமான சூரி அதில் இடம்பெற்ற பரோட்டா கமெடியில் சூரியின் எதார்தமான நடிப்பால் தமிழ் சினிமா ரசிகர்களிடம் பரோட்டா சூரியாக அறியப்பட்டார்.
அதனை தொடர்ந்து ரஜினி,விஜய்,சூர்யா போன்ற முன்னனி நடிகர்களின் திரைப்படத்தில் காமெடி நாயகனாக நடித்த இவர் முதல்முறையாக விடுதலை திரைப்படத்தில் ஹீரோவாக நடித்திருத்தார்.
நல்ல விமர்சனத்தை பெற்ற இப்படம் வசூலையும் வாரி குவித்தது. இதன் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகமும் உருவாக இருக்கிறது. அதனை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளிவந்த கருடன் திரைப்படம் 50 கோடிக்கு அதிகமாக வசூல் சாதனை புரிந்தது.
இதனை தொடர்ந்து இவரின் அடுத்த திரைப்படமான கொட்டுக்காளி’ வரும் வெள்ளிக்கிழமை ரிலீசாக் உள்ளது. இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ள நிலையில் நடிகர் சூரி தனது அடுத்த படம் குறித்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் ‘கருடன்’ திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் அப்படத்தை தயாரித்த லார்க் ஸ்டுடியோஸ் திரு.கே. குமாருடன் இணைகிறேன்.
இத்திரைப்படத்தை ‘விலங்கு’ இணைய தொடரை இயக்கிய திரு.பிரசாந்த் பாண்டியராஜ் இயக்குகிறார். என்றென்றும் உங்களின் அன்பையும், ஆதரவையும் எதிர்நோக்கும், என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் சூரிக்கு வாழ்த்துகளை குவித்து வருகின்றனர்.
-பவானி கார்த்திக்