3600 யூனிட்டு மேல் மின்சாரம் பயன் படுத்தினால் கூடுதல் கட்டணம்..!! மின்சார வாரியத்தின் புதிய அறிக்கை..!!
ஜூலை 1ம் தேதியில் இருந்து வணிக நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கான மின்கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில் வீடுகளில் ஆண்டுக்கு 3ஆயிரத்து 600 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன் படுத்தினால்.., வணிக நிறுவனங்களில் வசூல் செய்வதை போலவே.., வர்த்தக பயன்பாடு கட்டணம் வசூலிக்கப்படும் என ஒரு தகவல் வெளியாகி இருந்தது.
இதுகுறித்து விளக்கம் கேட்ட மின்சார வாரியம் அந்த தகவல் உண்மை இல்லை என தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள மொத்த 4 சதவிகித மக்கள் மட்டுமே 3600 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன் படுத்து கின்றனர். அவர்களுக்கு வர்த்தக கட்டணம் வசூலிக்கப்படாது எனவும் மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
மின்கட்டணம் குறித்து வெளியாகும் போலி தகவல்களை கண்டு வியாபாரிகள் மற்றும் வணிக உரிமையாளர்கள் மற்றும் நிறுவனங்கள் வைத்திருப்பவர்கள் யாரும் இந்த போலி தவல்களை நம்ப வேண்டாம்.
மின்கட்டணம் குறித்து உங்களுக்கு சந்தேகம் இருந்தால் மின்சார வாரிய உரிமையாளரிடம் கேட்டு தெரிந்துக்கொள்ளலாம்.