இடியமின்னின் அடுத்த அப்டேட்.., எந்த மாவட்டங்களுக்கு கனமழை தெரியுமா..?
காற்றின் திசை வேக மாறுபாடு காரணமாக, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகம், மற்றும் புதுச்சேரியில் செப்டம்பர் 1ஆம் தேதி வரை லேசான மழை முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் சில பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி கொண்டு இருக்கிறது.
சென்னையின் புறநகர் பகுதிகளான நுங்கம்பாக்கம், கோயம்பேடு, அண்ணா நகர், வட பழனி, நீலாங்கரை, திருவான்மியூர், வேளச்சேரி, சோழிங்கநல்லூர் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது.
நேற்று இரவு முதல் பெய்த பலத்த மழையால் சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது, இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர்.
திருவண்ணாமலை ஆரணி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கனமழை பெய்து வருகிறது, காற்றுடன் கூடிய கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியாக இருந்து வருகிறது மற்றும் ஏரி குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.