“என் உயிர் உள்ளவரை சாராயம் குடிக்க மாட்டேன்” – கள்ளச்சாராய குடித்து பாதிக்கப்பட்டவர்.. குணமான பிறகு பேட்டி..!
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 150 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 80க்கும் மேற்பட்டவர்கள் உடல் நிலையில் முன்னேற்றம் அடைந்து தேறி வருகின்றனர்.
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமாகிய கருணாபுரத்தைச் சேர்ந்த மொட்டையன் (70) என்ற கூலி தொழிலாளி பேட்டி ஒன்றை அளித்துள்ளார், அதில் கடந்த 18ம் உடம்பு வலிக்காக 2 சாராய பாக்கெட் வாங்கி குடித்தேன்.
அன்றிரவே வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. காலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது உயிர் பிழைப்பேனா? என்று பயத்தில் இருந்தேன்.
ஆனால் மருத்துவமனையில் எனக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் தற்போது எனது உடல்நிலை சீராகி உள்ளது.
இனிமேல் நான் எக்காரணம் கொண்டும் சாராயம் குடிக்க மாட்டேன். என் உயிர் உள்ளவரை இனி சாராய ஆசையும் இருக்காது.
மேலும் எனக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க உதவிய முதல்வருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
-பவானி கார்த்திக்