அரசுதுறையில் யாருக்கு எவ்வளவு கமிஷன்..?
தமிழகத்தில் சில அரசு பொதுபணித்துறைகளில் ஒரு சிலர் கமிஷன் வாங்குவது வழக்கம். சில தினங்களுக்கு முன்பு அரசு துறையின் திட்ட பணிகளை செயல்படுத்த ஏலம் விட பட்டுள்ளது.
அந்த ஏலத்தை எடுக்க யார் யாருக்கு எவ்வளவு கமிஷன் கொடுக்க வேண்டும். திட்டத்தை செயல்படுத்த எவ்வளவு பணம் என்று, ஒரு பேப்பரில் துண்டு சீட்டில் எழுதப்பட்டுள்ளது.
அரசு பணியை செய்ய ஒப்பந்ததாரர் டெண்டர் எடுத்தால், அரசியல்வாதிகளுக்கு 25%, 18% GST, டெண்டருக்கு 2%, அதிகாரிகளுக்கு 7%, பிடித்தம் 5%, என 57 சதவிகிதம் கொடுக்க வேண்டும்.
மீதமுள்ள 43% பணியை செய்ய வேண்டும். அந்த டெண்டர் எடுக்கும் நபரும் சம்பாதிக்க வேண்டும். வேலை எவ்வளவு தொகையில் நடக்கும் என்று பார்த்துகொள்ள வேண்டும்.
ரோடு போடுவது, கட்டடம் கட்டுவது போன்ற பணிகளில் வேலை செய்ய, அரசியல் வாதிகளுக்கு 18%, GST 18%, பில் எடுக்க அரசு அதிகாரிகளுக்கு 6%, டெண்டர் எடுக்க 2%, டெக்னிக்கல் கமிஷன் 1%, அரசு பிடித்தம் 5%, என மொத்தம் 50% கொடுக்க வேண்டும்.
மீதமுள்ள 50% பணத்தில் கட்டடம் கட்டுவது, ரோடு போடுவது பார்த்துக்கொள்ள வேண்டும். டெண்டர் எடுப்பவரும் சம்பாதித்துக் கொள்ள வேண்டும். என அந்த சீட்டில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது.
எந்த ஆட்சி வந்தாலும் இந்த ஊழல் நடந்துகொண்டு தான் இருக்கிறது. என அந்த சீட்டும், அதற்கு கீழ் இந்த கருத்தும் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருவதால், பொதுப்பணிதுறை அதிகாரிகள், நெடுஞ்சாலைதுறை அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.