நெல்லை அருகே சுத்தமல்லியை சேர்ந்தவர் ராஜபாண்டியன். இவர் இந்து மக்கள் கட்சியின் தென் மண்டல தலைவராக உள்ளார். இவர் பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் வசிக்கும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பாலகுமாரின் மனைவி கீதா என்பவருக்கு மூன்று லட்சம் வட்டிக்கு பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து கீதா வட்டி கொடுத்த வந்த நிலையில் அதிக வட்டி கேட்டதாகவும், ஒரு மாதம் வட்டி பணம் செலுத்தாத நிலையில் ராஜபாண்டியன் கீதா வீட்டிற்கு சென்று அவரை அவதூறாக பேசி கீழே தள்ளி விட்டதாக பாளையங்கோட்டை போலீசில் கீதா புகார் அளித்தார்.
இதன் அடிப்படையில் போலீசார் ராஜபாண்டியன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வன்கொடுமை தடுப்புச் சட்டம், கந்துவட்டி கேட்டு மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
















