“ஹலோ நான் உதயநிதி பேசுறன்..” மக்களோடு துணை முதலமைச்சர் உதயநிதி..!!
தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று கட்டுபாட்டு அறைக்கு சென்று பொதுமக்களைத் தொடர்பு கொண்டு அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தார்.
வடகிழக்குப் பருவமழை காலத்தில் சென்னை மற்றும் அதனையடுத்த திருவள்ளூர் மற்றும் சென்னையின் புறநகர் பகுதிகளில் மிகக்கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. எனவே, சென்னைப் பெருநகர மாநகராட்சியில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் உத்தரவின் பேரில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்., மேயர் பிரியா மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் இன்று ஆய்வு மேற்கொண்டனர்..
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலைத்தளம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்..
வடகிழக்குப்பருவமழையை எதிர்கொள்வதற்காக அமைக்கப்பட்டுள்ள ‘1913’ கட்டுப்பாட்டு அறை – வெள்ளத்தடுப்புப் பணிகளுக்கான நடவடிக்கைகள் – தயார் நிலையில் உள்ள 13000 தன்னார்வலர்கள், அவர்களுக்கும் அரசுக்கும் இடையேயான ஒருங்கிணைப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களைக் கேட்டறிந்தார். மேலும் கட்டுபாட்டு அறையில் இருந்து பொதுமக்களைத் தொடர்பு கொண்டு அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தார்.
24 மணி நேரமும் இயங்கக் கூடிய இந்த கட்டுப்பாட்டு அறையில் தினசரி 4 shift அடிப்படையில் 150 பணியாளர்கள் மக்களுக்கான சேவைகளை வழங்கி வருகின்றனர். மேலும், தண்ணீர் தேங்கினால் அதனை வெளியேற்ற 100-க்கும் அதிகமான மின் மோட்டார்கள் தயார் நிலையில் உள்ளன.
மழைநீர் வடிகால் பாதைகளைச் சரிவர மூடி வைப்பது – மின்சார மாற்றிகளை சரியான முறையில் உயரத்தில் தூக்கி நிறுத்துவது போன்ற பணிகள், மழைக்கால தங்குமிடம்- உணவு உட்பட அனைத்து நிவாரண வசதிகளும் உடனுக்குடன் சென்று சேருவதை உறுதி செய்யும் வகையில் ஆலோசனைகளை வழங்கினார்..