25 மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் கனமழை..!! குறிப்பிட்ட பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…!!
தற்போது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது… தற்போது வங்கக் கடலில் புதிய காற்றழுத்தம் உருவாகி இருப்பதால் மேற்கு, வடமேற்கு பகுதிகளில் கனமழை வலுவடைந்துள்ளது. எனவே தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா கடற்கரை பகுதிகளில் சூறைக்காற்று வீசக்கூடும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், தமிழ்நாட்டில் அடுத்து 3 நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புகள் இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்த படி தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. குறிப்பாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நேற்று நள்ளிரவு முதல் அதிக கனமழை பெய்து வருகிறது.
மற்றும் திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர் வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.
அதேபோல் மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று முதல் பெய்து வரும் கனமழையால் தற்போது 196.70 மி.மீ கனமழை பதிவாகியுள்ளது. மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருவதால். ஒரு சில பகுதிகளில் மழைநீர் பதிவாகியுள்ளது. இன்றைய காலை நிலவரப்படி தமிழ்நாட்டின் 25 மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.. அதபோல் அருவி உள்ள மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.