10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..!!
வளிமண்டலத்தில் உருவாகியுள்ள கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் குறிப்பிட்ட 10 மாவட்டங்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது..
தமிழத்தில் தற்போது வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளதால் கடந்த சில நாட்களாகவே சென்னையில் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது..
அதன் படி இன்று இரவு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர், மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யும் எனவும்., சென்னையில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது…