தமிழகத்தை வெளுத்து வாங்க காத்திருக்கும் கனமழை…!!
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடலூர், அரியலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளது. மேலும் சென்னையின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.