தமிழ்நாட்டை டிரில்லியன் பொருளாதார மாநிலமாக மாற்றுவதே தனது முதல் இலக்கு-“மு.க.ஸ்டாலின்”
தமிழ்நாட்டை டிரில்லியன் பொருளாதார மாநிலமாக மாற்றுவதே தனது முதல் இலக்கு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தகவல் தொழில்நுட்பவியல், டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாடு சென்னை வர்த்தக மையத்தில் 2 நாட்கள் நடைபெறுகிறது.
மாநாட்டை தொடங்கி வைத்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முதல் 2 ஆண்டுகளில் நிதி அமைச்சராக செயல்பட்டு பல மாற்றங்களுக்கு வித்திட்டவர் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் என பாராட்டு தெரிவித்தார்.
கலைஞரின் தொலைநோக்கு பார்வை கொண்ட முயற்சியால் இந்தியாவிலேயே ஐ.டி. தொழில் புரட்சியில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்வதாக பெருமிதம் தெரிவித்த முதலமைச்சர், 1996-ல் கணினி வாசலை திறந்தவர் கலைஞர் கருணாநிதி என தெரிவித்தார்.
தமிழ்நாட்டை டிரில்லியன் பொருளாதார மாநிலமாக உயர்த்த வேண்டும், உலகத்தின் மனிதவள தலைமையகமாக தமிழ்நாட்டை மாற்ற வேண்டும் என தனக்கு இரண்டு கனவுகள் உள்ளதாக முதலமைச்சர் தெரிவித்தார்.