வேலூர் மாவட்டத்தில் பறவைக்காய்ச்சலை தடுக்க தடுப்பு நடவடிக்கை…
வேலூர் மாவட்டத்தில் பறவைக்காய்ச்சலை தடுக்க தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் கூட்டுறவுத்துறையின் சார்பில் நியாயவிலைக்கடைகளில் பொதுமக்களுக்கு மஞ்சப்பை வழங்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி துவங்கி வைத்தார்.
இதில் கூட்டுறவுதுறை இணை இயக்குநர் குண ஐயப்பதுரை உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி, வேலூர் மாவட்டத்தில் இதுவரை யாருக்கும் பறவை காய்ச்சல் இல்லை என தெரிவித்த அவர், கடந்த இரண்டு நாட்களாக ஆந்திராவிலிருந்து வரும் வாகனங்களுக்கு மருந்து அடித்து வருவதாக கூறினார்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.