பாலக்கோடு அருகே அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து..!! போலிஸ் விசாரணை தீவிரம்..!!
பாலக்கோடு அருகே தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது அதில் 20 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வழியாக பெங்களுரில் இருந்து ஈரோடு நோக்கி அரசு பேருந்து ஒன்று 40 பயணிகளுடன் வந்து கொண்டிருந்தபோது கோடியூர் நெடுஞ்சாலையில் முன்னால் நின்று கொண்டிருந்த அரசு நகர பேருந்தின் மீது மோதாமல் இருக்க ஓட்டுனர் கோவிந்தராஜ் பிரேக் போட்டுள்ளார்.
ஏற்கனவே மழை பெய்து கொண்டிருந்த காரணத்தாலும், சாலை வழுவழுப்பாக இருந்ததினாலும் திடீரென பிரேக் போட்டதால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் ஓட்டுநர், நடத்துநர் உட்பட 10 ஆண்கள் மற்றும்10 பெண்கள் என மொத்தம் 20 பேர் பலத்த காயமடைந்து உள்ளனர். தகவல் அறிந்து வந்த பாலக்கோடு டி.எஸ்.பி.மனோகரன் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்க்கு சென்று காயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.