காயத்ரி ரகுராம் பெண்களுக்கான விசாரணை, சம உரிமை மற்றும் மரியாதை ஆகியவற்றுக்கு வாய்ப்பளிக்காததற்காக தமிழ்நாடு பாஜகவில் இருந்து விலகும் முடிவை கனத்த மனதுடன் எடுத்துள்ளதாகவும் அண்ணாமலை தலைமையில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என தெரிவித்து கட்சியில் இருந்து விலகி இருந்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அண்ணாமலை, கட்சியில் இருந்து விலகி செல்பவர்களை வாழ்த்தி அனுப்புவது தான் வழக்கம் என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இதுகுறித்து காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில், அண்ணாமலையுடன் ஒரு நேர்காணலை நடத்த விரும்புவதாகவும் அண்ணாமலை தன்னை எதிர்கொள்ள தயாரா? எனவும் கேள்வி எழுப்பி உள்ளார்
அண்ணாமலையின் வாழ்த்து தமக்கு தேவையில்லை எனவும் மன்னிப்பு மட்டுமே தனக்குத் தேவை எனவும் தான் ராஜினாமா செய்ய முடிவெடுப்பதற்கு முன்பு தன்னை அண்ணாமலை ஒருபோதும் வாழ்த்தவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.