வருடத்திற்கு ரூ 25 லட்சம், சம்பளம் என கூறி ஏமாற்றிய மோசடி கும்பல் கேரளாவில் கைது..!!
கேரள மாநிலத்தை ஒட்டியிருக்கும் மஹே பகுதியை சேர்ந்த ஸ்ரீஜித் என்பவர் ஸ்போர்ட்ஸ் கிளப் அருகே ஒரு விருந்தினர் மாளிகை நடத்தி வருகிறார்.., அதில் நேபாளத்தை சேர்ந்த சஜன்பட்ராய் வயது 34 என்பவர் மேற்பார்வையாளராக வேலை செய்து வருகிறார்.
சஜன்பட்ராய் போனிற்கு சில நாட்களுக்கு முன்பு ஒரு மர்ம கும்பல் தொடர்பு கொண்டுள்ளது.., அதில் பேசிய மர்ம நபர்.., நாங்கள் ஒரு கருத்தரிப்பு மையம் நடத்தி வருகிறோம் அந்த மையத்திற்கு சிகிச்சைக்காக வரும் பெண்களிடம் உடலுறவு வைத்துக் கொண்டு.., பெண்களை கருத்தரிக்க செய்தால் வருடதிற்கு 25 லட்சம் ரூபாய் வரை சம்பளம் என கூறியுள்ளார். முதல் மாதமே முன் பணமாக 2 லட்சம் ரூபாய் வரை கிடைக்கும் என சொல்ல,
அதற்கு ஆசைப்பட்ட சஜன்பட்ராய் உடனே ஓகே சொல்லியுள்ளார். எனவே அந்த மர்ம கும்பல் அதற்கு நீங்கள் முதலில் முன் பணம் செலுத்த வேண்டும் என ஒரு க்யூஆர் கோட்-டை அனுப்பியுள்ளனர்.., அதை ஸ்கேன் செய்து 49,500 ரூபாய் அனுப்பியுள்ளார்.
இருந்த பணத்தை எல்லாம் அந்த மர்ம நபருக்கு அனுப்பிய சஜன்பட்ராய்.., கை செலவிற்கு பணம் இல்லாமல் தவித்துள்ளார்.., எனவே சம்பளத்தில் இருந்து முன்பணத்தை ஸ்ரீஜித்திடம் கேட்டுள்ளார்.., எதற்கு முன் பணம் என கேட்ட பொழுது நடந்த வற்றை சஜன்பட்ராய் கூறியுள்ளார்.
சந்தேகித்த ஸ்ரீஜித்.., மர்ம நபரை தொடர்பு கொண்ட பேசிய போது மோசடி கும்பல் என தெரியவந்துள்ளது.., பின் ஏமாற்றத்தை உணர்ந்த சஜன்பட்ராய் மாஹே போலீசில் புகார் அளித்துள்ளார்.., புகாரின் பெயரில் மோசடி கும்பலை இன்று காலை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.