ட்ரோன் மூலம் உணவு விநியோகம்…!!
சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மருந்து, குடிநீர், உணவு உள்ளிட்டவற்றை மக்களிடம் கொண்டு சேர்பதற்காக ட்ரோன் ஒத்திகையானது சென்னை ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது.
தற்போது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது… தற்போது வங்கக் கடலில் புதிய காற்றழுத்தம் உருவாகி இருப்பதால் மேற்கு, வடமேற்கு பகுதிகளில் கனமழை வலுவடைந்துள்ளது. எனவே தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா கடற்கரை பகுதிகளில் சூறைக்காற்று வீசக்கூடும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், தமிழ்நாட்டில் அடுத்து 3 நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் சென்னையில் வெள்ள அபாயம் ஏற்படும் எனவும் சென்னையின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்க அதிக வாய்ப்புகள் இருப்தாகவும் சென்னை மாநில ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக சென்னைக்கு இன்றும் நாளையும் ரெட் அலார்ட் விடப்பட்டுள்ளது..
கடந்த முறை சென்னையின் பல்வேறு பகுதிகள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது., அங்கு வசிக்கும் மக்களுக்கு எலிகாப்டர் மூலம் உணவு விநியோகம் செய்யப்பட்டது. ஒரு சில பகுதிகளில் சின்னத்திரை பிரபலங்கள் நேரில் சென்று அத்தியவசயப் பொருட்களை வழங்கினர்..
இந்த ஆண்டு, மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதிகளுக்கு ட்ரோன் மூலம் உணவு, தண்ணீர் பாட்டில்களை விநியோகம் செய்ய மாநகராட்சி அதிகாரிகள் திட்டமிட்டு இருந்தனர். அதற்கான ஒத்திகை சென்னை ரிப்பன் மாளிகையில் மேயர் பிரியா முன்னிலையில் நடைபெற்றது.