தருமபுரி அருகே வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த யானைகள் கிராமத்திற்கு அருகே சுற்றித்திரிவதால் விவசாயிகள் மற்றும் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
வனத்திலிருந்து இரவு நேரத்தில் வெளியே வந்திருக்கும் இரண்டு காட்டு யானைகள் விவசாயிகள் விளைவித்திருக்கும் விளைபயிர்களை உண்டுவிட்டு தற்போது பாலக்கோடு அருகேவுள்ள பொம்மனூர் ஏரியில் புகுந்திருக்கிறது.
ஏரியிலுள்ள தண்ணீரை பருகிவிட்டு உடல் உஷ்ணத்தை தணிக்க யானைகள் குளியல் போட்டு வருவதை கிராம மக்கள் வேடிக்கை பார்த்து வருகின்றனர். காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து விடாதபடி கண்காணிப்பு பணியில் பாலக்கோடு வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இதே போல கிருஷ்ணாபுரம் அருகே ஒற்றை ஆண் யானை சாலையை கடந்து தற்போது பெரிய ஏரி மோட்டுப்பட்டி, வகுத்துப்பட்டி உள்ளிட்ட கிராமங்களை கடந்து தற்போது கம்பைநல்லூரை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
பாலக்கோடு வனத்துறையினர் யானைகளை மீண்டும் வனத்திற்குள் விரட்டியடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்
.