பிரபல சீரியல் நடிகையான திவ்யா ஸ்ரீதருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதை அடுத்து பிரபலங்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.
சன் டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் ‘செவ்வந்தி’ சீரியலில் லீடு ரோலில் நடித்து வருபவர் திவ்யா ஸ்ரீதர். ஏற்கனவே திருமணமாகி முதல் கணவரை விவாகரத்து செய்த திவ்யா, கடந்த ஆண்டு தனக்கும் சீரியல் நடிகர் அர்ணவ் திருமணமான தகவலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அப்போது தான் கர்ப்பமாக உள்ள தகவலையும் வெளியிட்டார். இந்த மகிழ்ச்சி நீடிப்பதற்குள் கணவர் அர்ணவ் உடன் தகராறு ஏற்பட்டதாகவும், அவர் தன்னுடைய வயிற்றில் அடித்ததில் ப்ளீடிங் ஏற்பட்டு, குழந்தை கலையும் நிலையில் உள்ளதாக தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திவ்யாவின் குற்றச்சாட்டுகளை அர்ணவ் மறுத்தார். திவ்யா தனது கணவரை விவாகரத்து செய்யாமலேயே தன்னுடன் லிவிங் ரிலேஷன் ஷிப்பில் இருந்ததாகவும் அவர் தன்னுடைய குழந்தையை கலைப்பதற்காகவே இப்படி ஒரு நாடகம் ஆடி வருவதாக தெரிவித்தார். இந்த சர்ச்சைகள் ஒரு பக்கம் இருக்க, தற்போது தனக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக திவ்யா சோசியல் மீடியாவில் அறிவித்துள்ளார்.
குழந்தையின் பிஞ்சு கையைப் பற்றி இருப்பது போன்ற போட்டோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள திவ்யா, “இந்த காத்திருப்பு நீண்டது. ஆனால் மிகவும் சிறப்பு வாய்ந்தது. என்ன நடந்தது என்பதற்காக அல்ல… என்ன நடக்கப்போகிறது என்பதற்காக. இது கடவுளால் எனக்கு ஆசீர்வதிக்கப்பட்ட குழந்தை, இதற்கு கடவுளுக்கு நன்றி” எனக்குறிப்பிட்டுள்ளார்.