ADVERTISEMENT
பழமை வாய்ந்த பவளமல்லி மரம் புதுக்கோட்டையில் பெய்ந்த கனமழையினால் வேருடன் சாய்ந்தது!!
புதுக்கோட்டையில் பெய்ந்த கனமழையினால் கீழ் இரண்டாம் வீதியில் பழமை வாய்ந்த பவளமல்லி மரம் வேருடன் சாய்ந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டையில் தொடர்ந்து 3 மணி நேரத்திற்கு மேலாக வெளுத்து வாங்கிய கனமழையால் கீழ் இரண்டாம் வீதியில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இல்லம் அருகே கடந்த 30 வருடங்களாக வளர்ந்து நின்ற பவளமல்லி மரம் வேருடன் பெயர்ந்து சாலையில் சாய்ந்து விழுந்தது.
தகவல் அறிந்து வந்த மன்ற தலைவர் திலகவதிசெந்தில் மற்றும் நகராட்சி அலுவலர்கள் உடனடியாக ஜேசிபி இயந்திரம் கொண்டு மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டு போக்குவரத்தை சரி செய்தனர்.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.