ADVERTISEMENT
புதுக்கோட்டையில் துப்புரவு பணி ஊழியர்கள் போராட்டம்….
புதுக்கோட்டையில் துப்புரவு பணி செய்யும் ஊழியர்கள் தங்களுக்கு முறையாக உபகரணங்கள் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட 42 வார்டுகளிலும் துப்புரவு பணி செய்வதற்காக தனியாருக்கு ஒப்பந்த அடிப்படையில், 288 துப்புரவு ஒப்பந்த பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த ஒன்றரை மாதமாக சம்பளம் வழங்காததை கண்டித்து, புதுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, ஒப்பந்த துப்புரவு பணியாளர்களுக்கு சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும், துப்புரவு பணி செய்யும் தங்களுக்கு கையுறை, துடைப்பம், போன்ற உபகரணங்களை வழங்க வேண்டும் என கோரிக்கை வலியுறுத்தி அலுவலகத்தை முற்றியிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.