சென்னை மதுரவாயல் – துறைமுகம் ஈரடுக்கு பாலம் அமைப்பதற்கு ஒன்றிய சுற்றுச்சூழல் நிபுணர் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.
20.56 கிலோ மீட்ட தூரத்திற்கு 4 வழி சாலையாக சென்னை மதுரவாயல் உயர்மட்ட பாலம் அமைக்க நிபந்தனைகளுடன் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, 5 ஆயிரத்து 800 கோடியில் துறைமுகம் மதுரவாயல் பறக்கும் மேம்பால திட்டம் செயல்படுத்த உள்ளது.
உயர்மட்ட பாலத்திற்காக எழுப்பப்படும் பில்லர்களால் மழை மற்றும் சாதாரண காலங்களில் நீரோட்டத்திற்கு தடை ஏற்படக் கூடாது என்றும் பாலம் அமைக்க தற்காலிகமாக அமைக்கப்படும் கட்டமைப்பு பணிகள் முடிந்த ஒரு மாதத்திற்குள் அகற்றப்பட வேண்டும் என்றும் நிபந்தனை வைக்கப்பட்டுள்ளது.
கட்டுமானத்தின் போது அகற்றப்படும் கழிவுகளை நீர்நிலையிலோ அல்லது அதற்கு அருகிலோ கொட்ட கூடாது என்றும் நிபந்தனை விதித்து இத்திட்டத்திற்கு அனுமதி வழங்ம ஒன்றிய அரசுக்கு சுற்றுச்சூழல் நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட்டு அடுத்த 30 மாதத்திற்குள்முடிக்க அரசு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
fs- ஒன்றிய அரசு , சென்னை மதுரவாயல் – துறைமுகம் ,