ஜாமீன் கேட்ட சவுக்கு சங்கர்..! மதுரை நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு..!
தேனி மாவட்டம் பழனி செட்டிபட்டி எல்லைக்குள் தனியார் விடுதியில் தங்கியிருந்த சவுக்கு சங்கர் 2.5 கிலோ கஞ்சா வைத்திருந்ததாக சவுக்கு சங்கர் உட்பட 4 பேர் மீது பழனி செட்டிபட்டி காவல் நிலையத்தில் 7 பிரிவின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருந்தனர்.
அப்போது கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கரை 2 நாட்கள் போலிஸ் காவலில் வைத்து விசாரிக்க மதுரை மாவட்ட போதை பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி செங்கமல செல்வன் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் இரண்டு நாட்கள் சவுக்கு சங்கரை தேனி மாவட்டம் பழனி செட்டிபட்டி காவல்துறையினர் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
காவலர்கள் விசாரணை முடிந்த பின்னரே சவுக்கு சங்கர் மதுரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். போலீஸ் காவல் விசாரணையின் போது காவல்துறையினர் தன்னை துன்புறுத்தவில்லை, உணவு, தங்குமிடம் வழங்கியதாகவும் வழக்கறிஞர்கள் தன்னை நேரில் சந்தித்தகாவும் சவுக்கு சங்கர் நீதிபதி முன் பதிலளித்தார்.
அதனை தொடர்ந்து கஞ்சா வழக்கில் 2ம் முறையாக கைது செய்யப்பட்டுள்ள சவுக்கு சங்கர் ஜீன் 5 ஆம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க மதுரை மாவட்ட போதை பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி செங்கமல செல்வன் உத்தரவிட்டிருந்தார்..
நீதிபதியின் உத்தரவின் பெயரில், மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவை சிறைக்கு சவுக்கு சங்கர் அழைத்து வரப்பட்டார்.
அப்போது நீதிபதி முன் பேசிய அவர்.., தன்னை யாரும் துன்புறுத்தவில்லை என சவுக்கு சங்கர் கூறினார். அதன் பின் சவுக்கு சங்கரின் ஜாமீன் மனு வழக்கு வருகின்ற 27ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
– லோகேஸ்வரி.வெ