இறுதி கட்ட பணியில் சந்திராயன் 3..! சந்திராயன் 3 தற்போது எங்கு உள்ளது தெரியுமா..?
இந்தியாவின் கனவு திட்டங்களில் ஒன்றாக நிலவின் தென் துருவத்தை ஆராய்வதற்கு கடந்த 14ம் சந்திராயன் 3 விண்கலம் விண்ணிற்கு அனுப்பப்பட்டது. கடந்த ஜூலை 14ம் தேதி சந்திராயன் 3 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. குறைந்த பட்சம் 170 கிமீ தொலைவும் அதிக பட்சம் 36,500 கிமீ தொலைவும் கொண்ட புவி நீள் வட்ட சுற்று பாதையில் சந்திராயன் 3 வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டுள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ( இஸ்ரோ ) கடந்த 14ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சந்திராயன் 3 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணிற்கு அனுப்பியது. சந்திராயன் 3 விண்கலம் வெற்றிகாரமாக பூமியை இரண்டு முறை சுற்றியுள்ளது.
முதல் முறை பூமியை சந்திராயன் 3 விண்கலம் சுற்றும் பொழுது பூமியில் இருந்து அதிக பட்ச தூரத்தை 36 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து 42 ஆயிரம் கிலோ மீட்டராக அதனுடைய சுற்று பாதையை உயர்த்தி, இரண்டாவது நாள் சுற்றும் பொழுது பூமியில் இருந்து குறைந்த பட்ச தூரமான 175 கிமீ தூரத்தில் இருந்து 200 கிமீ ஆக சுற்று பாதை உயர்த்தப்பட்டுள்ளது. முன்றாவது நாளான இன்று பூமி சுற்றும் பொழுது அதிக பட்ச தூரமாக 42 ஆயிரத்து 60 ஆயிரம் கிலோ மீட்டராக அதன் சுற்று பாதையை அதிகரித்துள்ளது
சந்திராயன் -3 விண்கலம் பூமியில் இருந்து குறைந்த பட்சம் 236 கிலோ மீட்டர் தொலைவிற்கும் அதிக பட்சம் ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 609 கிலோ மீட்டர் தொலைவிற்கும் புவி நீள் வட்டப் பாதையை சுற்றி வலம் வந்து கொண்டு இருக்கிறது.
பூமிக்கும் அருகிலும் புவியின் ஈர்ப்பு விசை பிடியிலும் சுற்றி வரும் சந்திராயனை நிலவின் ஈர்ப்பு விசைக்குள் அனுப்புவதே விஞ்ஞானிகளின் அடுத்த கட்ட வேலை என தெரிவித்துள்ளனர். முதலில் பூமிக்கும் நிலவிற்கும் இடையிலான சம ஈர்ப்பு விசை புள்ளியில் சந்திராயன் 3 விண்கலம் செயல்படுத்தி விடும் அதற்கான வேலைகளை ஆகஸ்ட் 1ம் தேதி இரவு இஸ்ரோ விஞ்ஞானிகள் மேற் கொள்ளுவார்கள்.
சந்திராயன் மீண்டும் புவி ஈர்ப்பு விசைக்கு வராமல் இருக்கும் வகையில் கூடுதல் அழுத்தத்தோடு நிலவின் ஈர்ப்பு விசை வட்டத்திற்க்குள் விண்கலம் அனுப்பப்படும்.., கொஞ்சம் கொஞ்சமாக சந்திராயன் நிலவை சுற்றி வரும் பின் விண்கலத்தில் இருக்கும் உந்துகலம் தரையிறங்கி தனித்தனியே பிரிக்கப்பட்டு நீள் வட்டப்பாதையில் செலுத்தப்படும், அதன் பின் சந்திராயன்-3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கும்.
சந்திராயன் -3 நிலவில் தரையிறக்கப்பட்டு முழுமையாக வெற்றி அடையும் என்பதில் எந்த வித மாற்றமும் இல்லை என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.