அழகே அழகில் தீட்டொரு சிலை அழகே – சாய்ப்பல்லவி 33
மலையாள படத்தின் மூலம் சினிமா உலகில் கால் பதித்தவர் “சாய்பல்லவி”.. கடந்த 2013ம் ஆண்டு வெளியான பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமானவர் சாய்பல்லவி.. முதல் படத்திலேயே ரசிகர் பட்டாளத்தை ஈர்த்தவர்..
அதன் பின்னர் மலையாளத்தில் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு படங்களிலும் தொடர்ந்து நடிக்க ஆரம்பித்தார்.. அதன் பின்னர் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் பான் இந்தியா படமாக தயாராகும் “ராமாயணம்” படத்தில் சீதை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
தமிழில் தியா, தனுஷ்க்கு ஜோடியாக மாரி 2, சூர்யாக்கு ஜோடியாக என்.ஜி.கே. படங்களில் நடித்துள்ளார்.
சாய்பல்லவி பொறுத்தவரையில் அதிகம் மேக்கப் போடுவதும் கிடையாது, கவர்ச்சியாக உடை அணிவதும் கிடையாது.. அதேபோல் பொது நிகழ்ச்சிகளில் கூட பாரம்பரிய உடையான புடவை அணிந்து கொண்டு வருவது வழக்கம்..
இதுவரை சாய்பல்லவி நடித்த படங்களிலும் சரி பங்கேற்ற பொது நிகழ்ச்சிகளிலும் சரி அவர் கவிர்ச்சியான உடை அணிந்தது கிடையாது. அதற்கான காரணம் குறித்து ஒரு பேட்டியில் நடிகை சாய்பல்லவி தெரிவித்திருந்தார்.
அதில் “சினிமாவில் வருவதற்கு முன் நான் ஒரு நடன நிகழ்ச்சியில் ஆடினேன் அதில் கவர்ச்சியான உடை அணிய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. ஒருமுறை மக்கள் ஒரு பெண்ணை கவர்ச்சியாக பார்த்துவிட்டால், அவர்களை அடுத்த முறை பார்க்கும் போது அது தான் நினைவிற்கு வரும் அதனால் நான் கவர்ச்சியில் நடிக்க விரும்பவில்லை. எனக்கும் அதில் விருப்பமில்லை என்று தெரிவித்தார்.
மக்கள் என்னை கவர்ச்சிக்காக பார்க்க நான் ஆசைப்படவில்லை.., நான் எப்போதும் பாரம்பரியமான உடையில் மட்டுமே நடிக்க ஆசை மக்களும் என்னை இப்படியே மட்டுமே பார்க்க விரும்புகிறார்கள், அதையே நானும் விரும்புகிறேன்’ என்றார்.
இப்படி பல ரசிகர்களின் மனதில் கனவு தேவதையாக வாழும் சாய்பல்லவியின் 33வது பிறந்தநாள் இன்று