கலைஞர் 6ம் ஆண்டு நினைவு நாள்..! மாற்றுத் திறனாளிகள் சங்க தலைவர் தங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை..!!
முத்தமிழ் அறிஞ்சர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்கள் 1924ம் ஆண்டு ஜூன் 3-ம் தேதி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருக்குவேலை என்ற சிறிய கிராமத்தில் முத்துவேலர் மற்றும் அஞ்சுகம் அம்மையார் ஆகியோருக்கு மகனாய் பிறந்தார்.
ஆரம்ப காலத்தில் கதைகள் மற்றும் நாடகம் என எழுத ஆரம்பித்தார். அதன் பின் அழகிரி சாமியின் சமூக நலன்கள் குறித்த பேச்சுகளை கேட்டு அரசியலுக்கு வர வேண்டும் என்ற ஆசையோடு அரசியலால் கால் பதித்தார்.
1942-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10-ம் தேதி முரசொலி என்ற பத்திரிகையினை தொடங்கி நாட்டில் நடக்கும் நிகழ்வுகளை செய்திகளாக வெளிச்சம் போட்டு காட்ட தொடங்கினார். அதேபோல் முரசொலியினை தொடர்ந்து தமிழரசு, குடியரசு மற்றும் முத்தாரம் ஆகிய படைப்புகளையும் படைத்தார்.
நம் முத்தமிழ் அறிஞ்சர் கலைஞர் அவர்கள் இதுவரை 5 முறை முதல்வராக இருந்து மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்துள்ளார். 1967ம் ஆண்டு எம்.ஜி.ஆர் எதிர்த்து போட்டியிட்டார்., அந்த ஆண்டு ஆட்சியை தொடர்ந்து 1971ம் ஆண்டும் முதல்வராக பதவி வகித்தார். அதன் பின் 1989ம் ஆண்டு ஜெயலலிதா அவர்களை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
1996ம் ஆண்டும் ஜெயலலிதா அவர்களை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2006ம் ஆண்டு பல லட்சம் ஒட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
♦ மிகச்சிறுபான்மை சமூகத்தில் இருந்து கூட ஒருவர் முதலமைச்சர் ஆகமுடியும் என நிரூபித்துக் காட்டினார்..
♦ இந்தியாவில் முதன்முதலாக “மாநில சுயாட்சி குழுவை” தமிழ்நாடு அரசு மருத்துவர் ராஜமன்னார் தலைமையில் உருவாக்கினார்.
♦ தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தை உருவாக்கி, பேருந்துகளை நாட்டுடைமையாக்கினார், .
♦ தமிழ்நாட்டின் சிறிய கிராமங்களையும் இணைக்கும் வகையில், சாலைத் திட்டம்
♦ தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தை உருவாக்கி, ஏழை மக்களை அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கு வழங்கினார்.
♦ கண்ணொளி திட்டத்தின் மூலம், இலவச கண் சிகிச்சை முகாம்களை ஆரம்பித்து வைத்தார்.
♦ சமூகத்தில் முற்றிலும் ஒதுக்குதலுக்கு ஆளாகியிருக்கும் பிச்சைககாரர்களுக்கென்று மறுவாழ்வு மையம்
♦ ஒடுக்கப்பட்டோருக்கு இலவச கான்கிரீட் வீடுகள் வழங்கும் திட்டம்
♦ பிற்படுத்தப்பட்டவர்களின் இட ஒதுக்கீட்டை 31% ஆகவும், தாழ்த்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டை 18% ஆகவும் உயர்த்தியவர்..
♦ நபிகள் நாயகத்தின் பிறந்தநாளான மிலாடி நபி திருநாளை, விடுமுறை தினமாய் அறிவித்தார்
♦ தமிழ்நாட்டில் முதல் விவசாய கல்லூரியாக, கோவை விவசாய கல்லூரியை உருவாக்கியவர்.
♦ மீனவர்களின் நலன் காக்க, இலவச வீடு வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தவர்.
♦ கோயில்களில் குழந்தைகளுக்கான “கருணை இல்லம்” அமைத்தவர்.
♦ பயனற்ற நிலத்தின் மீதான வரியை நீக்கும் திட்டம்
♦ மிகப் பிற்படுத்தப்பட்டோருக்கு 20% தனி இட ஒதுக்கீடு., தாழ்த்தப்பட்டோருக்கு 18% தனி இட ஒதுக்கீடு பழங்குடியினருக்கு 1% தனி இட ஒதுக்கீடு, அருந்ததியினருக்கு உள் ஒதுக்கீடு .
♦ இந்தியாவிலேயே முதன்முறையாக விவசாயத்திற்கு இலவச மின்சாரம்.
♦ அரசு வேலை வாய்ப்புகளில் பெண்களுக்கு 30 % இடஒதுக்கீடு தந்தவர், கலைஞர்.
♦ ஏழைப் பெண்கள் திருமண நிதி உதவி திட்டம்
♦ விதவைப் பெண்கள் மறுமண நிதி உதவி திட்டம்
♦ கர்ப்பிணிப் பெண்களுக்கு நிதி உதவி திட்டம்
♦ மகளிர் சுய உதவி குழுக்களை அமைத்து நலஉதவி திட்டம் உட்பட 100க்கும் மேற்பட்ட திட்டங்களை செயல்படுத்தினார்..
இப்படி மக்களுக்காகவும் அவர்களின் நலனுக்காகவும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்திய நமது திரு கருணாநிதி அவர்கள் 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7-ம் தேதி அன்று சென்னையில் உடல்நல குறைவால் தனது 94-ம் வயதில் இயற்கை எழுதினார்.
இன்று அவரின் 6ம் ஆண்டு நினைவு நாள்.. கலைஞரின் நினைவு தினத்தையொட்டி இன்று அமைதிப் பேரணி நடைபெறும் என திமுக சார்பில் முன்னதே அறிவிப்புகள் வெளியானது தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் முன்னேற்றச் சங்கம் அறிவித்துள்ளது.
இதுபற்றி தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் முன்னேற்றச் சங்க மாநில தலைவர் ரெ.தங்கம் நேற்று வெளியிட்டிருந்த அறிக்கையில் கலைஞரின் பொற்கால ஆட்சியில் ஊனமுற்றோர் என்ற சொல்லை நீக்கியும், மாற்றுத் திறனாளிகள் என பெயர் சூட்டி மகிழ்ந்ததுடன், அவர்களுக்கு தனி நலவாரியம், தனித் துறையினை அமைத்து, அத்துறையினை தனது நேரடி கட்டுப்பாட்டில் தனி அமைச்சகம் கொண்டு வந்துள்ளது.
கலைஞருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அவருடைய பெயரில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொடர்ந்து தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் முன்னேற்றச் சங்கம் நடத்தவுள்ளோம். இன்று காலை 8.30 மணிக்கு சென்னை அண்ணாசாலை ஓமந்தூரார் அரசினர் தோட்டம் வளாகத்தில் அமைந்துள்ள கலைஞர் சிலை அருகில் இருந்து, ஏராளமான மாற்றுத் திறனாளிகள் தங்களது இணைப்பு சக்கர (ஸ்கூட்டி) வாகனத்தில் பங்கேற்கும் அமைதி பேரணி தொடங்கி., காமராஜர் சாலையில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் முடிவுபெறும். என அறிவித்துள்ளார்.