ஐஸ்வர்யா அபிஷேக் பச்சன் விவாகரத்து..! உறுதிப்படுத்தும் பதிவு..!
சமீப மாதங்களாகவே நட்சத்திர தம்பதியினர் விவாகரத்து செய்யும் செய்திகள்தான் தொடர்ச்சியாக வலம் வந்துக் கொண்டிருக்கிறது. தனுஷ்-ஐஸ்வர்யா முதல் ஜெயம்ரவி- ஆர்த்தி வரை ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்து வருகிறது.
இந்தவரிசையில் தற்போது பாலிவுட்டின் ஸ்டார் ஜோடியான ஐஸ்வர்யா ராய்-அபிஷேக் பச்சன் விவகாரத்து செய்தியும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இது குறித்து அதிகாரபூர்வமாக கூறவில்லை என்றாலும் மறைமுகமாக வெளிபடுத்தி வருகின்றனர்.
தமிழ், இந்தி, மராத்தி, ஆங்கிலம் என்று பல்வேறு மொழிகளில் முக்கிய வேடத்தில் நடித்தவர் ஐஸ்வர்யா ராய். இவர், பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனை பல வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.
பாலிவுட் சினிமாவின் பிரபலமான ஸ்டார் ஜோடி என்று அறியப்பட்ட இவர்கள் இருவரும், விவாகரத்து செய்யப்போவதாக சில மாதங்களாக தகவல் பரவி வருகிறது.
ஆனால் இதுகுறித்து இருவரும் வெளிப்படையாக எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில், இவர்கள் இருவரும் விவாகரத்து செய்ய இருப்பதை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
அதாவது, இணையதள நெட்டிசன் ஒருவர், தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த பதிவில், வயதான காலம் வரை இணைந்து வாழ வேண்டும் என்று தான் பலரும் நினைக்கிறார்கள். ஆனால், வாழ்க்கை நாம் விரும்புவது போல் அமைவதில்லை என்று கூறப்பட்டுள்ளது. இந்த பதிவை பார்த்த அபிஷேக் பச்சன், அதற்கு லைக் போட்டுள்ளார்.
இதன்மூலம் இருவருக்கும் விவாகரத்து ஆக உள்ளதாக ரசிகர்கள் நினைத்துக் கொண்டு, அந்த தகவலை வைரலாக்கி வருகின்றனர்.
-பவானி கார்த்திக்