பிரபல நடிகை பூர்ணாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதை அடுத்து ரசிகர்கள் சோசியல் மீடியாவில் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.
தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் பூர்ணா. தெலுங்கில் ரவிபாபு இயக்கிய “யா” என்ற படம் மூலமாக திரையுலகில் அறிமுகமான பூர்ணா, தமிழில், ‘முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு’, ‘வேலூர் மாவட்டம்’, ‘வித்தகன்’, ‘தகராறு’, ‘சவரக்கத்தி’, ‘தலைவி’ உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கேரளாவைச் சேர்ந்த சனித் ஆசிப் அலி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் துபாயில் பிரபல தொழிலதிபர் என்பதால் திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகிய பூர்ணா, துபாயில் செட்டில் ஆனார்.
கடந்த டிசம்பர் மாதம் தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்த பூர்ணா, இன்று அழகிய ஆண் குழந்தைக்கு தாயாகியுள்ளார். பூர்ணா, மருத்துவமனை ஊழியர்கள், குழந்தை மற்றும் கணவனுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் தனக்கு ஆண் குழந்தை பிறந்ததாக எழுதினார். தனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். சோசியல் மீடியாவில் பூர்ணாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.