மீன்கள் பதப்படுத்தும் அலையில் ஏற்பட்ட திடீர் விபத்து.. பெண்களுக்கு நேர்ந்த சோகம்..!
தூத்துக்குடி மாவட்டம் புதூர் பாண்டியாபுரம் பகுதியில் மீன்களை பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது.
இந்த நிறுவனத்தில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதி மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பெண்கள் உழியர்கள் பணியாற்றி வந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு ஆலையில் திடீரென ஏற்பட்ட மின் விபத்தால் அங்கிருந்த அமோனியா கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது.
இதனையடுத்து, அலை முழுவதும் பரவிய அமோனிய வாயுவால் அங்கு பணியில் இருந்த கும்பகோணம் பகுதியை சேர்ந்த 5 பெண்கள் மற்றும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 16 பெண்கள் உள்பட 30 பேருக்கு மூச்சு விடுவதற்கு சிரமம் கண் எரிச்சல் ஏற்பட்டு மயக்கம் அடைந்தனர்.
இதனைத்தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்களை ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு பாதிக்கப்பட்ட 30 பெண்களுக்கு திவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. தகவறிந்து வந்த புதியம்புத்தூர் போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-பவானி கார்த்திக்