Wednesday, December 3, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

விவசாயிகளுக்கு ஒரு குட் நியூஸ்..! அமைச்சர் மனோ தங்கராஜ் அளித்த உறுதி..! இதில் இனி உடனடி நடவடிக்கை..!

ஆவின் மூலம் ரூபாய் 4 கோடியே 50  இலட்சம் வருவாய் ஈட்டப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு மட்டும் ரூபாய் 3 கோடியே 9 இலட்சம்  வருவாய் ஈட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

by logeshwari
July 13, 2024
MADHIMUGAM NEWS

MADHIMUGAM NEWS

விவசாயிகளுக்கு ஒரு குட் நியூஸ்..! அமைச்சர் மனோ தங்கராஜ் அளித்த உறுதி..! இதில் இனி உடனடி நடவடிக்கை..!

 

 

 

மதுரை  ஆவின்  நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து இன்று (13.07.2024) மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் திரு.த.மனோ தங்கராஜ் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் திரு.த.மனோ தங்கராஜ் அவர்கள் செய்தியாளர்களிடம்   தெரிவித்ததாவது,   பால்வளத்துறை மற்றும் ஆவின் நிறுவனமானது நிலையான வளர்ச்சியை தொடர்ந்து கண்டு  வருகிறது. உதாரணமாக மதுரை மாவட்டத்தில் சென்ற  ஆண்டு கொள்முதல் செய்யப்பட்ட பால்  நாளொன்றிற்கு சராசரியாக 1 இலட்சத்து 20 ஆயிரமாக  இருந்தது.

ஓராண்டு காலத்தில் 1 இலட்சத்து  70 ஆயிரமாக எட்டியுள்ளது. வருகின்ற காலத்தில் கொள்முதல் 1 இலட்சத்து 70 ஆயிரம் என்பது 2  இலட்சத்தை எட்டிவிடும் அளவிற்கு ஆவின் நிறுவனமானது வளர்ச்சி அடைந்து வருகிறது.

அதேபோன்று  ஆண்டு  முழுவதும் ஒரே சீரான விலையை பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கி வருவது.  ஆவின் நிறுவனம் மட்டுமே. அதுமட்டுமல்லாமல், ஆவின் நிறுவனத்திற்கு பால் வழங்குகின்ற பால்  உற்பத்தியாளர்களுக்கு 3 ரூபாய் ஊக்கத்தொகை தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், ஒவ்வொரு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் மூலமாக பல்வேறு நன்மைகளை  விவசாய  பெருங்குடி மக்கள் பெற்று வருகின்றனர். உதாரணமாக, கடந்த ஓராண்டில் மட்டும்  மதுரை  மாவட்டத்தில் பிரதம பால் உற்பத்தியாளர் கூட்டுறவு விவசாய சங்கத்தின்  மூலமாக  ரூபாய் 90  கோடிக்கு மேல் கால்நடை வளர்ப்பு மற்றும் பராமரப்பு கடன் வழங்கப்பட்டுள்ளது.

இதன்  மூலமாக  விவசாய  பெருங்குடி  மக்களின் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த ஆண்டு விவசாய பெருங்குடி மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் கடனுதவிளை உயர்த்துவதற்கு  முடியு  செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக, தமிழ்நாடு முழுவதும் 10 ஆயிரம் புதிய கால்நடை பண்ணைகள்
அமைப்பதற்கு இளைஞர்கள் மற்றும் விவசாய பெருங்குடி மக்களிடமிருந்து விண்ணப்பங்களை பெற்று  வருகிறோம்.

இத்திட்டத்தின் மூலமாக மதுரை மாவட்டத்தில் குறைந்த பட்சம் 700 நபர்கள் பயனடைய வேண்டும்   என்று   எதிர்பார்க்கிறோம்.  விவசாய  பெருங்குடி மக்கள் பண்ணை அமைப்பதற்கு  விரும்பினால்  பால்வளத்துறை மற்றும் ஆவின் துறை சார்ந்த அலுவலர்களிடம்   தங்களது விண்ணப்பங்களை வழங்கலாம்.

பால்வளத்துறை  மற்றும்  ஆவின்   நிறுவனமானது அனைத்து கால்நடைகளுக்கும் இன்சூரன்ஸ்  வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. பல இடங்களில் கால்நடை தவறிவிட்டால்  விவாய  பெருங்குடி மக்கள் ஒட்டுமொத்த பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.

எனவே, அனைத்து விவசாய பெருங்குடி மக்களும் தங்களது கால்நடைகளை இன்சூரன்ஸ் திட்டத்தில் பதிவு செய்து கொள்வதற்கு  ஆலோசனை வழங்கி வருகிறோம். மதுரை மாவட்டத்தை பொருத்தமட்டில் ஆவின்  நிறுவனத்தை  சார்ந்து இருக்கக்கூடிய கால்நடைகள் சுமார் 25 ஆயிரம் ஆகும்.

இந்த 25 ஆயிரம் கால்நடைகள் மட்டுமல்லாமல், பிரதம பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களில் இணைக்கப்படாத  கால்நடைகளைக் கூட சங்கங்களில் இணைத்து அவர்களும் இன்சூரன்ஸ் திட்டத்தில் பயன்பெற செய்ய முடிவு செய்துள்ளோம். மேலும், 85 சதவிகிதம் மானியத்துடன் கூடிய இன்சூரன்ஸ் திட்டத்தை  அறிமுகம் செய்துள்ளோம்.

கால்நடை வளர்ப்பவர்கள் அந்தந்த பகுதியில் இருக்கக்கூடிய பிரதம பால்  உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று  கேட்டுக்கொள்கிறேன். மேலும், கால்நடை தீவனம் 20 சதவிகித புரதச்சத்துடன் நியாயமான விலைக்கு வழங்கி  வருகிறோம்.

கால்நடைத்துறையோடு  பால்வளத்துறையும் இணைந்து கால்நடை விவசாயிகளுக்கு போதிய  அறிவுரைகள்  மற்றும்  அரசின்  மூலம்  செயல்படுத்தப்படும் திட்டங்கள்  குறித்து  எடுத்துரைக்கப்பட்டு  வருகிறது.  குறிப்பாக,  டி.ஐ.சி மூலமாக இருக்கக்கூடிய கடனுதவி திட்டம்,  தாட்கோ, டாம்செட்கோ, டாம்கோ போன்ற நிறுவனங்கள் மூலாக வழங்கி வரும் கடனுதவி  திட்டங்களில் விவசாய பெருங்குடி மக்கள்களை இணைத்து கூட்டங்கள் நடத்துவதற்கு  அறிவுறுத்தியிருக்கிறேன்.

எனவே, பல்துறை சார்ந்த அந்த பயிற்சியினை நடத்துவதற்கு அறிவுரை வழங்கியிருக்கிறோம். எனவே, தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனமானது ஒரு முக்கியப் பங்காற்றுகின்ற  துறையாக  ஆவின்  வளர்ந்து  வருகிறது.  இந்த  ஆண்டு ஆவின் நிறுவனமான   மிகப்பெரிய  இலக்கை    எட்டும் நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறது.

ஆவின்  நிறுவனமானது  தனியார்  துறைக்கு  இணையாக வளர்ச்சியடைந்து வருகிறது. உதாரணமாக   கடந்த  காலங்களில் மதுரை மாவட்டத்தில் ஆவின் மூலம் ரூபாய் 4 கோடியே 50  இலட்சம் வருவாய் ஈட்டப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு மட்டும் ரூபாய் 3 கோடியே 9 இலட்சம்  வருவாய் ஈட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

எனவே,  ஆவின் நிறுவனமானது தங்களது  உற்பத்தியில் வளர்ச்சியடைந்து கொண்டு வருகிறது. ஆவின் நிறுவனம் மூலம் தயார் செய்யப்படும்  பால் பொருட்கள் தரமானதாகவும், சமமான அளவீட்டிலும் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.

மன்னனது கடமை மக்களை காத்தல் என்று கூறுவது சங்ககால இலக்கியம். அதுபோல, மாண்புமிகு  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசு ஏழை-எளிய மக்களின் பிரச்சனைகளை கண்டறிந்து  பிரச்சனைகளுக்கு  தீர்வு  காணும் வகையில் பல்வேறு   மக்கள்   நலத்திட்டங்களை    செயல்படுத்தி வருகிறது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஒவ்வொரு வீட்டிலும், ஒவ்வொரு நபரும் ஏதாவது ஒரு திட்டத்தின் மூலம் பயனடைய வேண்டும் என்று கடந்த 3 ஆண்டுகளுக்கு திட்டங்களை  வகுத்து செயல்படுத்தி வருகிறரார்கள். அந்த வகையில், இந்த ஆவின் நிறுவனமானது மாண்புமிகு   தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலோடும், ஒத்துழைப்போடும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

என்று மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் திரு.த.மனோ தங்கராஜ் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். தொடர்ந்து, மதுரை, விருதுநகர், சிவகங்கை மாவட்ட ஒன்றியங்களின் பால் உற்பத்தி, பால்  விற்பனை மற்றும் ஒன்றியங்களின் வளரச்சி திட்டங்கள்   குறித்து துறை அலுவலர்கள் மற்றும் ஒன்றிய  அலுவலர்களுடன் மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் திரு.த.மனோ தங்கராஜ் அவர்கள் நேரில்  பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது, மதுரை ஆவின் பொது மேலாளர் திருமதி.ஆ.சிவகாமி அவர்கள் உட்பட மதுரை, விருதுநகர், சிவகங்கை ஆகிய மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள்  ஒன்றியங்களைச்   சார்ந்த   அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

– லோகேஸ்வரி.வெ

Tags: #aavinDMK MP MANO THANGARAJmaduraiஆவின் நிறுவனம்பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ்மதுரைமதுரை பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ்
ADVERTISEMENT

Related Posts

Heavy rain in 13 districts of Tamilnadu
தமிழ்நாடு

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

Detailed verdict of convict Gnanasekaran
தமிழ்நாடு

குற்றவாளி ஞானசேகரனுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பின் முழுவிபரம்!

Convict Gnanasekaran gets 30 years in prison
தமிழ்நாடு

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு… குற்றவாளி ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் சிறை!

Next Post

12 வயது சிறுவன் கடத்தல்..! உடந்தையாக இருந்த போலீஸ்..! பரபரப்பான மதுரை..!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.