புதிய பள்ளிக்கட்டிடம் கேட்டு முதல்வருக்கு கடிதம் எழுதிய 6 வயது சிறுமி..! சிறுமி கையால் அடிக்கல் நாட்டம்..!!
தமிழ்நாடு முழுவதும் சுமார் 37,554 அரசு பள்ளிகள் இயங்கி வருகின்றனர். அதில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். அதை போல 52 லட்சதிற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். அதிலும்
திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் 1000க்கும் அதிகமான அரசு பள்ளிகள் இயங்கி வருகிறது. இந்நிலையில் அம்பாசமுத்திரம் அருகே சிங்கப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் வேண்டும் என பெற்றோர்களும் பள்ளி நிர்வாகிகளும் கோரிக்கை வைத்து வந்துள்ளனர்.
இங்குள்ள கட்டிடம் பல வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் பழுதடைந்து விட்டது. நாங்கள் படிப்பதற்காக ஒரு புதிய கட்டிடத்தை கட்டி தர கேட்டு கோரிக்கை கடிதம் ஒன்றை அதே பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் 6 வயது மாணவி எழுதியுள்ளார்.
சிறுமியின் கடிதத்தை பெற்ற தமிழக அரசு 30 லட்சம் ரூபாய் செலவில் அரசு நிதியில் இருந்து ஒதுக்கி கட்டடம் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது. சிறுமியின் இந்த செயல் காண்போரை மெய் சிலரிக்க வைத்துள்ளது. சிறுமியின் இச்செயலை பாராட்டும் விதமாக சிறுமியின் கையாலே அடிக்கல் நாட்டப் பட்டுள்ளது.