செந்தில் பாலாஜிக்கு எப்போது சுயநினைவு திரும்பும் ? மா.சுப்பிரமணியன் விளக்கம்..
சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ள தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இன்று அதிகாலை 4:30 மணிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை நடைபெற்றது. இந்த அறுவை சிகிச்சை காலை 4:30 மணி முதல் காலை 10:15 மணி வரை நடந்துள்ளது. இந்த அறுவை சிகிச்சையில் நடந்தவற்றை பார்க்கலாம்.
காலை 4:30 மணி : அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ரத்த அழுத்தம் பரிசோதிக்கப்பட்டு மயக்கவியல் மருத்துவர்கள், மருந்தை செலுத்தியுள்ளனர்.
காலை 5 மணி : பின் மருத்துவமனை இருதவியல் துறை மூத்த மருத்துவர் ரகுராம் தலைமையிலான 6 பேர் கொண்ட மருத்துவக் குழுவினர். அறுவை சிகிச்சையை தொடங்கியுள்ளனர்.
காலை 6:30 மணி : மார்பு, எலும்பு மற்றும் விலா எலும்புகள் திறக்கப்பட்டு இதய மார்புச் சுவரின் உட்புறத்தின் தமனியில் இருந்து ஆரோக்கியமான இரத்த நாளத்தின் ஒரு பகுதியை எடுத்து, அடைக்கப்பட்ட தமனிக்கு மேல் கீழாக முழுமையாக இணைத்து அறுவை சிகிச்சை மேற்கொள்ளப் பட்டது.
காலை 10:15 மணி : 5 மணி நேரம் 15 நிமிடங்கள் அறுவை சிகிச்சைக்கு பின்னர்.., மருத்துவர்கள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்த அறிக்கையை அதிகார பூர்வமாக வெளியிட்டனர். அவரின் இதயதிற்கு செல்லும் ரத்த நாளத்தில் இருந்து 4 அடைப்புகள் நீக்கப்பட்டுள்ளன.
பைபாஸ் அறுவை சிகிச்சை முடிந்ததும்.. அவரின் உடல்நிலை சீராக உள்ளது. மருத்துவ குழுவினர் அவரை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் என மருத்துவர் கூறினார்.
இதுகுறித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியம். அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்ந்து 5 மணிநேரம் அறுவை சிகிச்சை அளிக்கப் பட்டுள்ளது. அறுவை சிகிச்சை முடிந்ததும் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகிறார்.
அவரை சந்திக்க நான் எந்த திட்டமும் மேற்கொள்ள வில்லை, சிறைத் துறையினரிடம் அனுமதி கேட்கவில்லை.
மறைந்த தலைவர் கருணாநிதி அவர்களின் நூறாவது பிறந்த நாளான ஜூன் 24ம் தேதி, தமிழ்நாடு முழுவதும் 100 இடங்களில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. அதில் சென்னையில் மட்டும் 10 இடங்களிலும் பிற மாவட்டங்களில் 90 இடங்களிலும் மருத்துவ முகம் நடைபெற இருப்பதாக, அமைச்சர் மா சுப்பிரமணியம் பேசினார்.