421கோடி ரூபாய் வரை காணவில்லை!குண்டை தூக்கி போட்டார்-ஹெச்.ராஜா
மயிலாடுதுறை : பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச் ராஜா செய்தியாளர்களை சந்தித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார். “சீர்காழியில் கண்டுபிடிக்கப்பட்ட சிலைகளை கோவிலில் தான் வைக்க வேண்டும்”.
யாக சாலை அமைப்பதற்காக சீர்காழியில் 16ம் தேதி சாலை சீரமைப்பு பணி நடந்துள்ளது.
அப்பொழுது ஐம்பொன்னால் ஆன 23 தெய்வ சிலைகளையும், 413 தேவார செப்பேடுகள், மற்றும் பூஜை பொருட்கள் என அனைத்தையும் பூமிக்கு அடியில் இருந்து எடுத்துள்ளனர்.
அதிலும் சேதமடைந்த பொருட்கள் மட்டும் 85, கண்டறிய பட்ட, அனைத்து பொருட்களையும் சீர்காழி சட்ட நாதர் கோவிலின் பாதுகாப்பு அறையில் வைத்துள்ளர்னர்.

இவற்றை பார்வையிட நேற்று மாலை பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச் ராஜா சென்றுள்ளார்.
அப்போது அவர் கூறியதாவது நாயன்மார்களின் பாடல் பதிக்கப்பட்ட செப்பேடுகள், ஐம்பொன் சிலைகள் முதன் முதலில் சட்டநாதர் கோவிலில் தான் கிடைத்துள்ளது.
அவ்வாறு கிடைத்த இந்த பொக்கிஷங்களை, கோவிலில் தான் வைக்க வேண்டும். இவை அனைத்தும் தர்மகர்த்தாவின் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.
மேலும் இதுகுறித்து விரைவில் ஹிந்து சமய அறநிலைய துறைக்கு தகவல் கொடுக்க வேண்டும்.
காரணம் இதற்கு முன் பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் கோவிலில் கண்டறிய பட்ட சிலைகள் அனைத்தும் போலியாக மாறிவிட்டது . அதாவது செம்பொன் அனைத்தும் செம்பாக மாறிவிட்டது. இதை பற்றி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு பொன் மாணிக்கவேல் ஐ.ஜி கூறியிருந்தார்.
எனவே தான் சந்தேகத்தில் சொல்கிறேன் இவையும் அப்படி மாற வாய்ப்பு உண்டு.
2021ம் ஆண்டு வரை சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 500 கோடிக்கும் மேல் உண்டியலில் சேர்ந்ததாக சொல்லப்பட்டது.
இந்த ஆண்டு 421 கோடி ரூபாய் வரை காணவில்லை என கூறினார் ஹெச்.ராஜா.
















