ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டி வழக்கில் சிறுமி தற்கொலை செய்துகொண்டதால் சென்னை இளைஞருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை வீடுகளுக்கு பேப்பர் போடும் வேலை பார்த்து வந்த குணசேகரன் என்ற இளைஞர், தான் குடியிருந்த வீட்டின் உரிமையாளருடைய மகளான 13 வயது சிறுமியை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி வந்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி 2020ம் ஆண்டு வீட்டின் குளியலறையில் தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து போக்சோ மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு குணசேகரன் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதுதொடர்பான வழக்கை விசாரித்து வந்த சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி குணசேகரனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்ததோடு, அவரை சாகும் வரை சிறையில் அடைக்கவும் உத்தரவிட்டார். மேலும் குணசேகரனுக்கு 3 லட்சம் ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி, அந்த தொகையை சிறுமியின் குடும்பத்திற்கு வழங்க உத்தரவிட்டார்.
















