கிருஷ்ணகிரி அருகே இருசக்கர வாகன சாகசத்தில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்கள் உயிரிழந்த நிலையில், ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் சேர்ந்த மூன்று இளைஞர்கள் இரண்டு இரு சக்கர வாகனத்தில் – இரு சக்கர வாகன சாகசத்தில் ஈடுபட்டு கொண்டு வந்துள்ளனர். கிருஷ்ணகிரி ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் பந்தாரப்பள்ளி என்னும் இடத்தில் சாகசகத்தில் ஈடுபட்டபோது. எதிர்பாராத விதமாக ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டனர்.
இதில் மத்திகிரியை சேர்ந்த சபரி (24) பெங்களூரை சேர்ந்த ஸ்ரீஹர்ஷா (27) இரண்டு பேர் சம்பவ இடத்தில் இறந்தனர். ஓசூரை சேர்ந்த தபீப் கான் படுகாயத்துடன் மீட்கப்பட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். குருபரப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.















