“வா வா என் தேவதையே..” ரித்திகா வெளியிட்ட போஸ்ட்..!! குவியும் லைக்ஸ்..!
சின்னத்திரை நடிகை ரித்திகா தமிழ்செல்வி பாக்கியலட்சுமி தொடரில் அமர்த்தா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர்.
வினு என்பவரை காதலித்து வந்த ரித்திகா 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அதன் பின் சீரியலை விட்டு விலகியிருந்த ரித்திகா இன்று வரை இன்ஸ்டாகிராம்-ல் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் அவருக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. தற்போது தனது குழந்தையுடன் எடுத்துக்கொண்ட முதல் போட்டோ சூட்டை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
அதற்கு பேமிலிகோல் என ஹாஸ்டேக் போட்டுள்ளார். அதோட குழந்தைக்கு பெயர் சூட்டும் விழாவையும் நடத்தி நிலா என தனது மகளுக்கு பெயர் சூட்டி உள்ளதாக அறிவித்து அது தொடர்பான போட்டோக்களையும் அவர் வெளியிட்டுள்ளார்…
அவர் கர்ப்பமாக இருந்த போதே சட்டம் என் கையில் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.. அப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது..