குழிக்குள் விழுந்த நபர்..!! 2 மணி நேர போராட்டம்..!! பரபரப்பான கோத்தகிரி…!
நீலகிரி அருகே 20 அடி குழிக்குள் விழுந்த நபரை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்..
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அடுத்த கரிக்கையூர் பங்களா பாடி கிராமத்தில் வசித்து வரும் பழங்குடியினர் இனைத்தை சேர்ந்த சுப்பிரமணி (வயது 38) என்பவர் கடந்த வெள்ளிகிழமை அன்று பயன்பாட்டில் இல்லாத வீட்டின் அருகே மூடப்படாமல் இருந்த குழிக்குள் விழுந்துள்ளார்..
இதனை கண்ட அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்துள்ளார்., தகவலின் பேரில் அங்கு வந்த கோத்தகிரி தீயணைப்பு துறையினர் முதலாவதாக குழிக்குள் விழுந்த சுப்பிரமணிக்கு ஆக்சிஜன் வசதியை செய்தனர்., அதன் பின்னர் சுமார் இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பின் அவரை உயிருடன் மீட்டனர்.
அதனை தொடர்ந்து சுப்பிரமணியை கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர் இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட போது., பூட்டிக்கிடக்கும் அந்த வீட்டில் புதையல் இருப்பதகாவும் அதற்காக தான் அங்கு குழி தோண்டப்பட்டு இருப்பதாகவும் ஊர் மக்கள் கேட்டதை அறிந்து அங்கு எட்டி பார்க்க சென்ற போது குழிக்குள் விழுந்ததாக சுப்பிரமணி தெரிவித்துள்ளார்..
இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..