அடங்கிய கூட்டம்..! ஆடியில் தொடங்கிய சின்னம்மாவின் பரி வேட்டை..! இந்த ஸ்கெட்ச் மிஸ் ஆகுமா..?
பிரிந்து சென்ற அதிமுகவினரை ஒருங்கிணைக்க சுற்றுப்பயணம் தொடங்கியுள்ள வி.கே.சசிகலா சென்னையில் இருந்து மதுரை விமான நிலையம் வந்த வந்தார் அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மேலும் சசிகலாவின் பாதுகாப்பிற்காக 15க்கும் மேற்பட்ட பவுன்சர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து காரில் அமர்ந்திருந்த சசிகலாவை புரட்சித்தாய் சின்னம்மா என்றும் அதிமுக பொதுச் செயலாளர் சின்னம்மா என்றும் தொண்டர் ஒருவர் உற்சாக குரல் எழுப்பி வரவேற்றார்.
மேலும் சசிகலா மதுரை வருவதை ஒட்டி அவருடைய ஆதரவாளர்கள் சார்பில் “ஆட்டம் போட்ட கூட்டம் ஆடி அடங்கிவிட்டது. ஆடியில் தொடங்குகிறது சின்னம்மாவின் பரி வேட்டை” அதிமுக மதுரை மாவட்டம் என போஸ்டர் விரகனூர், சிந்தாமணி, பெருங்குடி பகுதியில் ஒட்டப்பட்டது. இதில் விரகனுர் பகுதியி ஒட்டப்பட்ட போஸ்டர் சிலவற்றில் சசிகலா முகத்தை கிழித்துள்ளனர்.சசிகலா வருகை ஒட்டி அதிமுக தொண்டர்களால் ஒட்டப்பட்ட போஸ்டரால் மதுரை மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சசிகலாவின் இந்த பயணத்திட்டத்திற்கு பக்காவாக ஸ்கெட்ச் போட்டு கொடுத்தது திவாகரன் என சொல்லப்படுகிறது.. இந்த பயணத்திட்டத்தில் தினகரனும், ஓபிஎஸ்ஸும் ஒன்று சேரப் போவதாக எதிர் பார்க்கப்படுகிறது. இந்த பயணம் மூலம் தென்மண்டலத்தில் சசிகலா தன்னுடைய பலத்தை காட்ட போவதாக அதிமுக தரப்பில் நம்பப்படுகிறது.
அந்தவகையில் சசிகலாவின் பயண விவரம் புது தெம்பை தென்மாவட்டங்களில் ஏற்படுத்தி வருகிறது.. டிடிவி, சசிகலா, ஓபிஎஸ்ஸை கட்சிக்குள் இணைக்கலாம் என்று மூத்த நிர்வாகிகள் எப்போது சொன்னாலும், அதற்கு மறுப்பு சொல்லியபடியே இருப்பார் எடப்பாடி பழனிசாமி. ஆனால், தற்போது சில மாற்றம் எடப்பாடியிடம் தென்படுவதாக கூறப்படுகிறது.
சசிகலா செல்லும் இந்த பயணத்தில், சசிகலா வெற்றி பெறுவாரா..? முக்குலத்தோர் வாக்குகளை அதிமுக பெறுமா..? என தெரியவில்லை. அதேசமயம், பாஜகவின் அடுத்த “மூவ்” என்னவாக இருக்க போகிறது என்றும் யாருக்கும் தெரியவில்லை. அதற்கு காரணம், எடப்பாடி பழனிசாமியின் பிடிவாதம் என சொல்லப்படுகிறது.
சசிகலா + திவாகரன் + தினகரன் + ஓபிஎஸ் இவர்களின் முக்குலத்தோர் செல்வாக்கை வைத்தே, எடப்பாடி தரப்பை வீழ்த்த பாஜக இப்போதில் இருந்து பக்கா பிளான் போடுகிறதாம். எனவே ஒருபக்கம் சசிகலாவின் எழுச்சி, மறுபக்கம் எடப்பாடியின் லேசான மனமாற்றம் போன்றவை தென் மாவட்ட அதிமுகவை வீறுகொள்ள செய்கிறதா என காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
– லோகேஸ்வரி.வெ