அட இது புதுசா இருக்கே..!! பெரம்பலூரில் மக்களின் கவனத்தை ஈர்த்த அந்த நபர்..?
பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் அருண் நேருவிற்கு வாக்கு சேகரிக்கும் பணிகளை அக்கட்சியினர் தொடங்கியுள்ளனர். அதன்படி பெரம்பலூர் துறைமங்களத்தில் ஜக்கம்மா வேடம் அணிந்த நபர் திமுக அரசின் திட்டங்களை கூறி வாக்கு சேகரித்ததுடன் பாஜகவிற்கோ அல்லது பிற கட்சிகளுக்கோ வாக்களித்தால் வேலைவாய்ப்பின்மை போன்றவை பெருகும் எனக்கூறி குடுகுடுப்பை அடித்து வாக்கு சேகரித்தார். அப்போது பெரம்பலூர் தொகுதி எம்.எல்.ஏ.பிரபாகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இந்த வாக்கு சேகரிப்புமுறை அப்பகுதி வாசிகளை வெகுவாக கவர்ந்தது.