பட்டியலின பெண் சமைத்ததால் பிள்ளைகள் பள்ளிக்கு அனுப்பமாட்டோம் என சொன்ன பெற்றோர்..!! வட்டாட்சியர் கொடுத்த நெத்தியடி..!
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு பள்ளியிலும் காலை உணவு திட்டத்தை நேற்று முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். அதே சமையத்தில் திருப்பூர் மாவட்டம், வள்ளிபுரம் ஊராட்சிக்கு காளிங்கராயன் பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளியில் பட்டியலினத்தை சேர்ந்த தீபா என்ற பெண் ஊழியர் ஒருவர் காலை உணவை சமைத்துள்ளார். சமைத்து முடித்தவுடன் குழந்தைகளுக்கு பரிமாறி கொண்டு இருக்கும் பொழுது அங்கிருந்த பெற்றோர்கள் குழந்தைகளுக்கு உணவை கொடுக்காமல் புறக்கணித்து அழைத்து சென்றுள்ளனர்.
இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது., இந்த சம்பவம் குறித்து உயர் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர், இருந்தும் பெற்றோர்கள் சமாதான உடன் படிக்கைக்கு வராமல் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பட்டியலின பெண் சமைத்த ஒரே காரணத்தால் பெற்ற பிள்ளையின் பசியை புரிந்து கொள்ளாமல் பெற்றோர் உணவை கொடுக்காமல் அழைத்து சென்றுள்ளனர்.
இதனை தொடர்ந்து வட்டாட்சியர் அலுவலகம் சென்று குழந்தைகளுக்கு, பட்டியலினத்தை சேர்ந்த பெண் பணிவிடை செய்யக்கூடாது, அப்படி செய்தால் இனி எங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பமாட்டோம் என கோஷம் எழுப்ப, வட்டாட்சியர் இந்த பெண் தான் இனி இந்த பள்ளியில் அனைத்து மாணவர்களுக்கு பணிவிடை செய்வார், இங்கு தீண்ட தகோதோர் என யாரும் கிடையது. இது என் திட்டவட்ட மான தீர்ப்பு என வட்டாட்சியர் கூறிய பின் மீண்டும் மாணவர்களை பெற்றோர் பள்ளியில் கொண்டு வந்து விட்டுள்ளனர்.