முன்னணி நிறுவனமான அமேசான் தொடர்ந்து தனது ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகிறது. இந்நிலையில் மீண்டும் ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. மேலும், பொருளாதார பிரச்சைனைகளால் நடவடிக்கை என்று அந்த நிறுவனம் தகவல் அளித்துள்ளது.
கடந்த ஆண்டு முதல் முன்னணி நிறுவனங்கள் ஊழியர்களை நீக்கம் செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ட்விட்டர், கூகுள் போன்ற நிறுவனங்களை தொடர்ந்து அமேசான் நிறுவனமும் கடந்த அக்டோபர் மாதம் 10000 ஊழியர்களை பணியில் இருந்து நீக்கியது. இந்நிலையில் மீண்டும் அந்த நிறுவனம் ஊளியர்களை நிறுவனத்தில் பணிபுரியும் ஊளியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஆண்டி ஜாஸ்ஸி கூறுகையில், அமேசான் நிறுவனம் 18,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளது. மேலும் அமேசானில் ஏற்பட்டு வரும் பொருளாதார பிரச்சனைகளால் இந்த பணிநீக்கம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.